அனல் காற்றில் தபு?

tabu001.jpg

 

தனது படத்துக்கு சரியான நாயகி அமையாத தவிப்பில் இருக்கிறார் பாலுமகேந்திரா.’அது ஒரு கனாக்காலம்’ படத்துக்குப் பிறகு பாலுமகேந்திரா இயக்கும் படம் ‘அனல் காற்று’ கே.ராஜேஷ்வரின் ‘இந்திரவிழா’ படத்துடன் இதற்கும் தொடக்கவிழா நடத்தப்பட்டது.
ஆனாலும், படப்பிடிப்புக்கு இன்னும் கிளம்பாமலே இருக்கிறார் பாலுமகேந்திரா.

அனல் காற்றில் ப்ரியாமணி நடிப்பார் எனக் கூறப்பட்டது. பிறகு மாளவிகாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில், நக்மா நடிக்கிறார் என செய்திகள் அனைத்தையும் மறுத்தார் பாலுமேந்திரா.

அவரது விருப்பம் மேலே உள்ள எந்த நடிகையும் அல்ல. தபு நடித்தால் சிறப்பாக இருக்கும் என பாலுமகேந்திரா நினைக்கிறார். இதுகுறித்து தபுவிடமும் கேட்டகப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அனேகமாக தபு தனது சம்மதத்தை தெரிவிப்பார் என்கிறார்கள்.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடிக்க கவுதம் தபுவை அணுகினார். அந்தவாய்ப்பை தபு மறுக்க, இப்போது அந்த வேடத்தில் சிம்ரன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply