தீவிரவாதத்தை ‘அறுவடை’ செய்யும் அதிகாரிகள்!

37080321115120750.jpg

 

WD

மாலிக் என்ற பெயரில் தீவிரவாதிகள் குழு ஒன்று தென்னிந்தியாவில் ஊடுருவுகிறது. அவர்களின் சதித் திட்டங்களை காவல்துறை அதிகாரியுடன் உதவியுடன் முறியடிக்கிறார் உளவுத்துறை அதிகாரி.

‘ஆபரேஷன் மாலிக்’ என்ற இந்த களையெடுக்கும் வேலைதான் படத்தின் பிரதானப் பகுதி.

கோபி கிருஷ்ணன் என்ற உளவுத்துறை உயரதிகாரியாக மம்மூட்டியும், துடிப்பான காவல்துறை அதிகாரி அன்வர் ஹுசைனாக அர்ஜுனும், நாயகிகளாக சினேகாவும், மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.

‘வந்தே மாதரம்’ என்ற பெயரில் மலையாளத்திலும் வெளிவரவுள்ள இப்படத்தை டி.அரவிந்த் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு, சென்னை, கொச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், இளையான்குடி, தேங்காப்பட்டணம் பகுதிகளில் நடத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

மொத்தம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் பங்கஜ் புரொடக்சன் ஹென்றி ‘அறுவடை’ செய்துள்ளார்.

‘அறுவடை’ படக்குழு

நடிகர் – நடிகையர் : மம்மூட்டி, அர்ஜுன், சினேகா, மம்தா மோகன்தாஸ், ராஜ்கபூர், மாளவிகா, ரியாஸ் கான், விஜயகுமார், மும்தாஜ், ராஜன் பி. தேவ்.

சண்டைப் பயிற்சி : அனல் அரசு.
ஒளிப்பதிவு : வெற்றி, ராஜேஷ் வைத்யா
இசை : வித்யாசாகர்
பாடல்கள் : வைரமுத்து, பா. விஜய், யுகபாரதி
இயக்கம் : டி.அரவிந்த்

Leave a Reply