Archive for the ‘Blogs in Tamil’ Category

அஜித் ஜோடியானார் சமீராரெட்டி

Wednesday, March 19th, 2008

0111.jpg

 

‘ஏகன்’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை கவுதம் இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில், ராஜூசுந்தரம் இயக்கும் ஏகனில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
ஸ்ரேயாவிலிருந்து கத்ரினா கைப் வரை பலரை முயன்றும் கடைசியில் ஏகனில் ஜோடியானவர் நயன்தாரா. அஜித்தின் அடுத்தப் படத்துக்கு இந்த கதாநாயகி குழப்பம் இல்லை. நன்றி சொல்ல வேண்டியது கவுதமுக்கு. சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் அஜித் படத்துக்கு கவுதம்தான் இயக்குனர். கதையை தீர்மானிக்கும் முன்பே சமிராரெட்டிதான் கதாநாயகி என முடிவாகியுள்ளது.

எப்படி?

தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த சமீராரெட்டியை ‘வாரணம் ஆயிரம்’ படத்துக்காக கோடம்பாக்கம் கொண்டு வந்ததே கவுதம்தான். ‘காக்க காக்க’ படத்திலேயே எனக்கு அழைப்பு விடுத்தார் கவுதம் என சொல்லித் திரிகிறார் சமிரா. எப்படியோ…. ‘வராணம் ஆயரம்’  படத்தில் சமீராவின் நடிப்பில் சொக்கிப் போனவர் தனது அடுத்தப் படத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.

கவுதமின் தேர்வுக்கு அஜித், சிவாஜி புரொடக்ஷ்ன், இரு தரப்புமே மறுப்பு கூறவில்லையாம்.

விஜய், அசின் முதலிடம்

Wednesday, March 19th, 2008

023.jpg

 

மும்பையில் இருக்கும் அசினுக்கு இது ஆனந்த செய்தி. ‘கஜினி’க்கும் பிறகு காணாமல் போனாலும் மறத்தமிழன் அசினை மறக்கவில்லை.

என்ன விஷயம்?

இளைஞர்களின் மொபைல் போனில் அதிகம் டவுன்லோட் செய்யப்படும் நடிகர், நடிகை யார் என சமீபத்தில் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி நடிகர்களில் முதலிடம் பிடித்தவர் விஜய். ரஜினிக்கு கிடைத்தது ஐந்தாவது இடம். கமலுக்கு டாப் 5-ல் இடமேயில்லை.

நடிகைகளில் அதிகம் டவுன்லோட் செய்து டாப் 5-ல் முதலிடம் பிடித்தவர் அசின். த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா எல்லாம் இவருக்குப் பின்னால். சைலண்டாக சாதித்தது பாவனா. இவருக்கு டாப் 5-ல் ஐந்தாவது இடம்.

படங்களைப் பொறுத்தவரை ‘சிவாஜி’ தான் பாஸ். பல டஜன் படங்கள் வெளி வந்தாலும், இளசுகள் மனசில் பலமாக வேரூன்றியிருக்கிறார் ‘சிவாஜி’.

இந்தியன் பிரீமியர் லீக்: சூப்பர் கிங்ஸின் நட்சத்திர தூதர்கள் விஜய், நயன்தாரா

Wednesday, March 19th, 2008

vijay_srikant001.jpg

இந்தியன் பிரீமியர் லீகில் (ஐபிஎல்) விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதர்களாக நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட உள்ள 8 அணிகளும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பிரபலமானவர்களை தூதர்களாக நியமித்துவருகின்றன. அதன்படி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னையைச் சேர்ந்தவருமான கிருஷ்ணமாச்சார் ஸ்ரீகாந்த்தை சில வாரங்களுக்கு முன் நியமித்தது.

இந் நிலையில் அணிக்கு மேலும் கவர்ச்சி ஏற்படுத்துவதற்காக கோலிவுட் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோரை நட்சத்திர தூதர்களாக சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நியமித்துள்ளது. அதற்கான அறிமுக விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடிகர் விஜய் மட்டும் பங்கேற்றார். படப்பிடிப்பு காரணமாக நயன்தாரா பங்கேற்கவில்லை என அமைப்புக் குழு தெரிவித்தது. எவ்வளவு தொகைக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் தெரிவிக்கவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் உற்சாகம் அளிக்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கும் விளம்பர நிகழ்வுகளில் அவர்கள் இருவரும் பங்கேற்பர் என அணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் டெஸ்ட் வீரருமான வி.பி. சந்திரசேகர் தெரிவித்தார்.

 

முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் டி.எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஐபில் போட்டி: பிசிசிஐ-க்கு எதிர் அமைப்பாக ஜீ டிவி குழுமம் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) போட்டியைத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆதரவுடன் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியை நடத்த முடிவு செய்தது.

20 ஓவர்கள் அடிப்படையிலான இப் போட்டி ஏப்ரல் 18 முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் விளையாடும் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ராஞ்சியை சேர்ந்த மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெப்ளர் வெசல்ஸ் பயிற்சியாளராக உள்ளார்.

அணி வீரர்கள் விவரம்: மாத்யூ ஹேடன், மைக் ஹுஷே (ஆஸ்திரலியா), ஸ்டீபன் பிளெம்மிங், ஜேக்கப் ஓரம் (நியூஸிலாந்து), மகாயா நிதினி, அல்பி மோர்கல் (தென் ஆப்பிரிக்கா), முரளீதரன் (இலங்கை), எஸ். பத்ரிநாத், ஆர். அஸ்வின், அபிநவ் முகுந்த், வித்யுத் சிவராமகிருஷ்ணன், அனிருத் ஸ்ரீகாந்த், நெப்போலியன் ஐன்ஸ்டீன் (அனைவரும் தமிழகம்), சுதீப் தியாகி (உபி), ஜோஹிந்தர் சர்மா (ரோட்டக்), பார்த்திவ் படேல் (குஜராத்), சுரேஷ் ராய்னா (உபி).

கில்லியை போல குருவி படம் கலக்கும்- திரிஷா

Wednesday, March 19th, 2008

014.jpg

 

விஜய், திரிஷா ஜோடியாக நடிக்கும் குருவி படப்பிடிப்பு விறுவிறுப்பாக மலேசியாவில் சமீபத்தில் இதன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. உதயநிதி தயாரிக்கும் இப்படத்தை தரணி இயக்குகிறார்.
குருவி படம் பற்றி திரிஷா கூறியதாவது:-

கில்லி படம் எடுத்த குழுவினர் குருவி படத்திலும் சேர்ந்து இருக்கிறோம். படப்பிடிப்பு ஜாலி’யாக நடக்கிறது. கில்லி படப் பிடிப்பில் இருந்த மாதிரி உணர்வில் வேலை செய் கிறோம். கில்லி’ மாதிரி குருவி படமும் கலக்கும்.

நல்ல கேரக்டர்களில் நடித்து விட்டேன். சிறந்த நடிகை என்ற பெயரும் வாங்கி விட்டேன். இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. லேசா லேசா படம் மூலம் சினிமாவுக்கு வந்தேன். ஆறு வருடங்கள் ஓடி விட்டன. உழைப்பும் அதிர்ஷ்டம் இருந்ததால்தான் நிலைத்து இருக்கிறேன். இதை நிரந்தரமாக காப்பாற்றியாக வேண்டும்.

நயன்தாரா முன்னேறிக் கொண்டு இருக்கிறார். அவரைப்போல் நிறைய நடிகைகள் என்னைவிட நன்றாக நடிக்கிறார்கள். அவர் கள் சினிமாவில் நிச்சயம் சாதிப்பார்கள்.

அபியும் நானும் என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன். ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தின் கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அதோடு ராதாமோகன் `மொழி’ ஹிட் படத்தை கொடுத்தவர். ஜோதிகாவுக்கு அந்த ஒரே படத்தில் கிடைத்த பெயர் போதும். அபியும் நானும் படம் மூலம் எனக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

தனுஷ் படத்துக்கு ரஜினி பெயர்

Wednesday, March 19th, 2008

0071.jpg

 

மருமகன் என்பதால் ரஜினி படப் பெயரை பயன்படுத்துவதில் தனக்கு அதிக உரிமை இருப்பதாக தனுஷ் நினைக்கிறாரா?
‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் ரஜினி நடித்த, ‘மிஸ்டர் பாரத்’ படப் பாடலான, என்னம்மா கண்ணுவை ரீ-மிக்ஸ் செய்தார்கள். அடுத்தது ‘பொல்லாதவன்’. இது ரஜினி படத்தின் பெயர். பெயரோடு நிற்காமல், ரஜினி பாடலான ‘எங்கேயும் எப்போதும்…’ பாடலையும் ரீ-மிக்ஸ் செய்தார்கள்.

விஜயா வாஹினி தயாரிக்கும் படத்திற்கும் ரஜினி படத்தின் பெயரை வைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. ‘தாமிரபரணி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை விஜயா வாஹினி தயாரிக்கிறது. ‘தலைநகரம்’ இயக்குனர் சுராஜ் படத்தை இயக்குகிறார். தனுஷ் ஜோடி இன்னும் முடிவாகவில்லை. த்ரிஷா அல்லது நயன்தாராவாக இருக்கலாம்.

இந்தப் படத்தின் கதைக்கு படிக்காதவன் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பது படக்குழுவினரின் கருத்து. படிக்காதவன், ரஜினி, சிவாஜி இணைந்து நடித்தப் படம். ரஜினி படத்தின் பெயர் என்பதால் சென்டிமெண்டாக ஒர்க் – அவுட் ஆகுமென தனுஷூக்கும் நம்பிக்கை.

கதையை விட பெயரை நம்புகிறார்கள். பெயர் படத்தை காப்பாற்றுமா, பார்ப்போம்!

தமிழ் சினிமாவில் ரகுவரன்!

Wednesday, March 19th, 2008

img1080319041_1_1.jpg37080319182951457.jpg

 

தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் எந்தவொரு இளைஞரும், தனது படைப்பில் ரகுவரனுக்கென்று ஒரு கதாப்பாத்திரத்தை வைத்திருப்பர்!’

இதை, எள்ளளவும் கர்வமின்றி பேட்டி ஒன்றில் சொன்னவரும் ரகுவரனே!

தமிழ்த் திரையுலகில் தனித்தன்மை மிகுந்த நடிப்புத் திறனால் சுட்டிகள் முதல் பாட்டிகள் வரை வசீகரித்திருந்த இவர், உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (மார்ச் 19) மரணமடைந்தார்.

எம்.ஜி.ஆர் காலத்தில், அவருக்கு வில்லன்களாக வரும் நம்பியார், அசோகன், மனோகர் போன்றோரை உண்மையாகவே கெட்டவர்களாகாவே கருதி, அவர்களை வாயார வையும் ரசிகர்களைக் கொண்ட தமிழகம், வில்லத்தனங்களையும் ரசிக்கத் தொடங்கியது ரகுவரன் உள்ளிட்டோரின் வருகைக்குப் பிறகுதான் என்றுச் சொன்னால் அது மிகையாகாது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ரகுவரன், கோவையில் 1948-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார்.

கே.ஹரிஹரன் இயக்கத்தில் 1982-ல் வெளிவந்து சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற ‘ஏழாவது மனிதன்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என்று வெவ்வேறு கதாப்பாத்திரத்திலும் சுமார் 25 ஆண்டுகாலம் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரைப் பதித்தார்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானது, இல்லற வாழ்க்கையில் பிரிவு என தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சோகங்களைச் சந்தித்த இவர், தனது கலையுலக வாழ்க்கையை முழுமையாகவே பூர்த்திசெய்தார்.

த‌மி‌ழ், தெலு‌ங்கு, மலையாள‌ம், ‌‌ஹ‌ி‌ந்‌தி ஆ‌கிய மொ‌ழிக‌ளி‌ல் 400‌-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்க‌ளி‌ல் நடித்த ரகுவர‌‌ன், சமீபத்தில் சிறிது காலம்

 

நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவரை தனது ‘சிவப்பதிகாரம்; படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் கரு. பழனியப்பன்.

அதன்பின், மீண்டும் வலம்வரத் தொடங்கியவர், ‘தொடக்கம்’ படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேடத்தில் நடித்தார். அந்த வேடத்தில் நடித்தது தனக்கு நிறைவாக இருந்தது என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரகுவரன் கடைசியாக நடித்து வெளிவந்த படங்கள் ‘பீமா’, ‘சில நேரங்களில்’; வெளிவராத படங்கள் ‘இந்திர விழா’, ‘யாரடி நீ மோகினி’. அத்துடன், அஜித்தின் புதிய படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.

மிஸ்டர் பாரத் , உதயம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, புரியாத புதிர், காதலன், பாட்ஷா, முதல்வன் போன்ற படங்கள் இவரது வில்லத்தனத்தில் வசீகரிக்கப்பட்டவற்றில் குறிப்பிடத்தககவை.

ஏழாவது மனிதன், ஓடை நதியாகிறது, சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி, முகவரி, ரன், சிவப்பதிகாரம் போன்ற ஏராளமான படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் ஆட்கொண்டவர்.

நடிகர் ரகுவரன்… இவரது யதார்த்தம் பிறழாத நடிப்புத் திறன், ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நடிப்புத் துறையிலுள்ள பலரையும் வியக்கவைத்துள்ளது மறுக்க முடியாத உண்மை

பொள்ளாச்சியில் ரஜினி பட ஷூட்டிங்?

Wednesday, March 19th, 2008

dddvddcd.jpg

 

தமிழ்நாட்டில் ரஜினியின் தலை தெரிந்தாலே, திருவிழா கூட்டம் சேரும். பப்ளிக்கில் அவரை வைத்து படம் இயக்குவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?

எனவேதான், ஆந்திர எல்லையைத் தாண்டி ரஜினியின் படப்பிடிப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால் குசேலன் படத்திற்காக ரஜினியை பொள்ளாச்சி அழைத்து வந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் பி.வாசு.

ஹைதராபாத்தில் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை, பொள்ளாச்சியில் தொடர திட்டமிட்டுள்ளார் இயக்குனர்.

ரஜினி, நயன்தாரா, பசுபதி, வடிவேலு ஆகியோர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

இதற்காக பொள்ளாச்சியை சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம் பகுதிகளில் லொகேஷன் பார்த்து வந்திருக்கிறது குசேலன் படக்குழு.

பாதுகாப்பு பிரச்சினையில்லாமல் ஷூட்டிங்கை நடத்தினால் சரிதான்.

சமீரா ரெட்டியின் பூரிப்புக்குக் காரணம்

Wednesday, March 19th, 2008

aaf7b1b2781e3bd037dc958be9f4e.jpg

 

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விரைவில் வெளிவர இருக்கிறது.

`வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா ரெட்டியை எப்படியும் நடிக்க வைக்க வேண்டும் என கவுதம் விரும்பினார். அதன்படி அவரை தமிழுக்குக் கொண்டு வந்து விட்டார்.

சமிராவிடம் அழகும் இருக்கிறது. திறமையும் இருக்கிறது. ஒரு படத்துடன் விடுவானேன் என்று தனது அடுத்த படத்திலும் சமிராவுக்கு சிபாரிசு செய்தார்.

அஜீத்-தை வைத்து கவுதம் இயக்கும் அடுத்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதிலும் சமிராவையே நாயகி ஆக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

முதல் படம் சூர்யாவுடன், இரண்டாவது அஜித்துடன். பூரித்துப் போயிருக்கிறார் சமீரா ரெட்டி.

படக் கம்பெனி தொடங்குகிறார் சினேகா

Wednesday, March 19th, 2008

b445c3764fce2729f3eb32b680f36f.jpg

 

மரத்தைச் சுற்றி டூயட் பாடி சினேகாவுக்கு அலுத்து விட்டதாம். சேலஞ்ச் ஆக ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு தோதாக சினேகா தேர்ந்தெடுத்திருப்பது சினிமா தயாரிப்பு.

நடிப்புடன் விளம்பரம், ரியல் எஸ்டேட், சொந்த ஊரில் திருமண மண்டபம் என சினேகாவின் சொத்து அஸ்திவாரம் இப்போதே ஸ்ட்ராங். இதில் கூடுதல் பலமாக விரைவில் சொந்த படக் கம்பெனி தொடங்க உள்ளார்.

குழந்தைகள், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே இவரது படக் கம்பெனி தயாரிக்குமாம். கம்பெனி பொறுப்பை சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு, வழக்கம் போல நடிப்பை தொடர்வாராம் சினேகா.

ஏற்கனவே படமெடுத்து கையைச் சுட்டுக் கொண்ட முன்னாள் கதாநாயகிகள் சிலரிடம் இருந்து டிப்ஸ்-களை பெற்றுக் கொண்டால் சரிதான்.

பாலச்சந்தர் அசிஸ்டெண்ட் இயக்கும் படம் `தோழா’

Wednesday, March 19th, 2008

65593cff4b247772272f875854fb.jpg

 

அரோவணா ‌ஃபி‌லி‌ம்‌ஸ் தயா‌ரி‌ப்பில் உருவாகும் புதிய படம் `தோழா‌’.

இப்படத்தில் செ‌ன்னை-600028-‌ல் நடி‌த்த தோழ‌ர்க‌ள் நா‌ன்கு பே‌‌ரும் ஹ‌ீரோவாக நடிக்கிறார்கள். ‌நி‌தி‌ன் ச‌த்யா, ‌பிரே‌ம்‌ஜி அமர‌ன், அஜ‌ய் ரா‌ஜ் ம‌ற்று‌ம் வச‌ந்‌த் ‌விஜ‌ய் உடன் சா‌கி‌த்யா, ஜெ‌னிப‌ர், ல‌‌க்சனா, சவு‌மியா, வெண்ணிறஆடை மூ‌ர்‌த்த‌ி, டெ‌ல்‌லி கும‌ா‌ர் ஆ‌கியோரு‌ம் நடி‌க்‌கிறா‌ர்க‌ள்.

வானமே எ‌ல்லை எ‌ன்று வா‌ழ்‌கிற 4 ந‌ண்ப‌ர்க‌ளி‌ன் வா‌‌ழ்‌க்கையைப் புர‌ட்டி‌ப் போடு‌கிறது ஒரு ச‌‌ம்பவ‌ம். அ‌ந்த அ‌தி‌ர்‌ச்‌சியை அ‌வ‌‌ர்க‌ள் எ‌ப்படி எ‌தி‌ர் கொ‌ண்ட‌ா‌ர்க‌ள் எ‌ன்பதே பட‌‌த்‌தி‌ன் கதை எ‌ன்கிறார் அதன் இ‌ய‌க்குன‌ர் எ‌ன். சு‌ந்தரே‌ஸ்வர‌ன்.

படம் பற்றிய சில தகவல்கள்…

* இயக்குனர் பாலச்ச‌ந்த‌ரி‌டம் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றியவர் எ‌ன். சு‌ந்தரே‌ஸ்வர‌ன். அதனா‌ல் தனது அசிஸ்டெண்ட் கே‌ட்டு‌க்கொ‌ண்டதற்கிணங்க, சி‌றிய வேட‌த்‌தி‌ல் பாலச்ச‌ந்‌த‌ர் நடி‌த்து‌ள்ளா‌ர்.

* பட‌த்‌தி‌ன் ‌நாய‌கி ஜெ‌னிபர், ‌`கி‌ல்‌லி’-‌யி‌ல் ‌விஜ‌ய் த‌ங்கையாக நடி‌த்தவ‌ர். த‌ற்கொலை செ‌ய்வது போ‌ன்ற கா‌ட்‌சி‌யி‌‌ல் நாலாவது மாடி‌‌யி‌லிரு‌ந்து ‘டூ‌ப்’ போடாம‌ல் கு‌தி‌‌த்து‌ள்ளா‌ர் இவ‌ர்.

* `வா தோழா வரலாறு படை‌ப்போமே’ என்ற பாடலு‌க்கு சுஜா ஆடி‌யிரு‌க்‌கிறா‌ர்.

* ‌பிரே‌ம்‌‌ஜி அமர‌ன் பட‌த்து‌க்கு இசையமை‌த்து‌ள்ளா‌ர்.

* தாவ‌ணிக் கனவுக‌ள் பட‌த்‌தி‌ல் வரு‌ம், `ஒரு நாயக‌ன் உதயமா‌கிற‌ா‌ன்’ பாடலை ‌ரீ-‌மி‌க்‌ஸ் செ‌ய்து‌ள்ளன‌ர்.

* பொ‌ள்ளா‌‌ச்‌சி ம‌ற்று‌ம் மே‌ற்குத் தொட‌ர்‌ச்‌சி மலை‌ப்பகு‌திக‌ளி‌ல் டூயட் பாட‌ல் ஒ‌ன்றை படமா‌க்‌கியு‌ள்ளன‌ர்.