Archive for the ‘Cine Interviews’ Category

Ramya riding high!

Monday, March 24th, 2008

a_061.jpg

Which are the two things you like best about yourself?

I think I’m very laborious and extremely committed to my profession. Those are the two things I like best about myself.

You were better seen as glam doll in Kollywood earlier? How did you deal with it?

When I did ‘Kuthu’, I was just a young teen of 16. I was absolutely naïve to the dealings of the industry and thus gave away to doing many such glam roles. That’s when I realized that I was getting bore doing such stereotype roles time and again. At that time, offers started pouring in from Kannada and I was quick to shift my attention there. Till today, I’m trying to break those glamorous shackles around me.
 
So do you think that there’s any harm in doing glamorous roles?

Not really. But then, now I’m more inclined to doing performance-oriented films and work with more established directors. In Kannada I’ve done quite a few such films like Jothe Jotheyali, Amruthadhare and Meera Madhava Raghava that has won me a lot of applause. I want to continue in that trend.

You are back to Kollywood now and are creating waves here?

(Smiles) Yes. It was with Thoondil that I finally got back to Tamil films. After that I had signed quite a number of films including Gautham Menon’s Vaaranam Aayiram and Pollathavan.

Pollathavan went on to become a huge hit. How do you feel about that?

I’m extremely elated with the way things are shaping up for me. Pollathavan gave me an author-backed role that of a middle class simple girl, and I just loved playing my character. My next film Vaaranam Aayiram also presents me in an equally charming role. In fact that’s my dream role. I couldn’t have asked for more.
 
Would you like to brief us a bit on your dream role?

Well, I can’t divulge much at this point. All I can say is that I play a 14 year old in this film. This role was a real challenge but nevertheless I loved it. It gave me one huge scope to experiment with my looks, gestures, outfits, and everything else. It’s truly an adorable role. You guys are gonna love me in this role. This is one role I’m gonna forever cherish doing.

So now that you back in Kollywood, are you eyeing the top slot again?

Not really. Actually I’ve never been so competitive. Now that I’m back, I intend to take up important projects rather than settling down with everyday kind of roles. I’m just eying good scripts for now.

காலம் கூடி வந்தால் படம் இயக்குவேன் – பிரகாஷ் ராஜ்

Friday, March 21st, 2008

4991d1cb6c3ea58c6b7792b969197.jpg

 

வெ‌‌ள்‌ளி‌த்‌திரை’ பட‌த்‌தி‌ன் ப‌த்‌தி‌ரிகையாள‌‌ர் ச‌ந்‌தி‌ப்பில் இய‌க்குந‌ர் ‌வி‌ஜியுடன் வந்து கல‌ந்து கொ‌ண்டா‌ர் ‌பிரகா‌ஷ் ரா‌ஜ்.

அப்போது அவருடன் பேசியதில் இருந்து….

வெள்ளித்திரை படம் பற்றி…?

எனது டூய‌ட் மூ‌வி‌ஸ் சா‌ர்‌பி‌ல் ஆபாச‌மி‌ல்லாத தரமான பட‌ங்களை ம‌‌ட்டுமே எடு‌ப்பே‌ன் எ‌ன்ப‌தி‌ல் உறு‌தியாக இரு‌க்‌கிறே‌ன். அ‌ந்த வகை‌யி‌ல் மொ‌ழி‌க்கு‌ப் ‌பிறகு மு‌க்‌கியமான பட‌ம் வெ‌ள்‌ளி‌த்‌திரை.

‌சினிமாவைப் பற்றிய கதையை எப்படி தைரியமாக எடுத்தீர்கள்?

சி‌னிமா உலகை‌ப் ப‌ற்‌றி‌ப் படமெடு‌த்தா‌ல் பு‌ரியுமா எ‌ன்று சிலர் பயமுறு‌த்‌தினா‌ர்க‌ள். ‌வி‌ஞ்ஞா‌‌னி ப‌ற்‌றி‌ப் படமெடு‌த்தா‌ல் பா‌ர்‌ப்பவ‌ர்களு‌ம் ‌வி‌ஞ்ஞா‌னியாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌சிய‌மி‌ல்லை.

தளப‌தி, கே‌ப்ட‌ன் என்பது பற்றி வசன‌ங்க‌ளில் இடம்பெற்றுள்ளதே?

ஆம். யாரையு‌ம் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்வத‌ற்காக அ‌ந்த வசன‌ங்களை வை‌க்க‌வி‌ல்லை. ப‌ட்ட‌ம் எ‌ன்பது ம‌க்க‌ள் கொடு‌ப்பது. அதை ‌வி‌ட்டு, நே‌ற்று வ‌ந்தவ‌ர்க‌ள் எ‌ல்லா‌ம் ப‌ட்ட‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வதை‌த்தா‌ன் சு‌ட்டி‌க் கா‌ட்டி‌யிரு‌க்‌‌கிறோ‌ம். இதை நா‌ங்க‌ள் ‌கி‌ண்ட‌ல் செ‌ய்யாம‌ல் வேறு யா‌ர் செ‌ய்வார்கள்.

மற்ற மொழிகளில் நடித்தாலும் தமிழில் மட்டும் படம் தயாரிப்பது ஏன்?

நான் நா‌ன்கு மொ‌ழிக‌ளி‌ல் நடி‌த்தாலு‌ம் த‌மி‌ழி‌ல் ம‌ட்டு‌மே படம் தயாரிக்கிறேன். இ‌ந்‌திய ‌சி‌னிமா‌வி‌ல் தமிழ்த் திரையுலகம் கா‌சி மா‌திர‌ி‌ பு‌னிதமானது என்பதால் தமிழில் மட்டும் படம் எடுக்கிறேன்.

படம் இயக்கும் எண்ணம் உண்டா?

காலமு‌ம் நேரமு‌ம் கூடி வ‌ந்தா‌ல், ஒரு பட‌த்தை இய‌க்குவே‌ன். எனக்கும் படம் இயக்கும் ஆசை இருக்கிறது என்று கூறி முடித்தார் பிரகாஷ் ராஜ்.

பேட்டியின் போது உடனிருந்த `வெள்ளித்திரை’ படத்தின் இய‌க்குந‌ர் ‌வி‌ஜியிடம், உங்கள் படத்தின் கிளைமா‌க்‌ஸ் ந‌ம்பு‌கிற மா‌தி‌ரி இ‌ல்லையே எ‌ன்று கே‌ட்டதற்கு, ‌விம‌ர்சன‌ம் எ‌ன்பது த‌னி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் கரு‌த்து. அது ச‌ரியாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல்லை எ‌ன்று பதிலளித்தார்.

ரீ-மிக்ஸ்’ மூலம் பழைய தலைமுறை பெருமை – சத்யராஜ்

Monday, March 17th, 2008

2ecfc3b28241c35bc6c5dd08c168a.jpg61847d9a2e1e6eb5e1a22d1c0c1fa.jpg

 

வில்லங்கமான கேள்விகளுக்கும் தயக்கமில்லாமல் பதில் சொல்வது சத்யராஜின் ஸ்டைல். ரீ-மிக்ஸ் பாடல்கள், எம்.ஜி.ஆர். வாரிசு குறித்து அவரிடம் வம்பாக கேட்ட கேள்விகளும் தெம்பாக அவர் அளித்த பதில்களும்…

பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வது தவறு இல்லையா?

தப்பே இல்லை. இது பழைய தலைமுறையின் பெருமையை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சி. மாமன் மகள் படத்தில் `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ பாடலை பயன்படுத்தினேன். வெற்றிவேல் சக்திவேலில் தங்கப் பதக்கத்தின் மேலே பாடல். தங்கம் படத்தில் பூ மழை தூவி பாடல். இப்போது `வம்புச்சண்டயில்’ எம்.ஜி.ஆரின் `நான் யார் நீ யார்’ பாடலை பயன்படுத்தியிருக்கேன்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாடல்களையே பயன்படுத்துகிறீர்களே?

எம்.ஜி.ஆர். பாடல்களை பயன்படுத்துவதில் தப்பு இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என்ற முறையில் அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. நான் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர். ரசிகன்.

பழைய படங்களை ரீ-மேக் செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறதே?

பழைய படங்களைத் திரும்ப எடுப்பதில் தப்பு இல்லை. நான் பி.யு. சின்னப்பாவின் உத்தமபுத்திரன் பார்க்கவில்லை. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தைத்தான் பார்த்திருக்கிறேன். எம்.கே. ராதா நடித்த அபூர்வ சகோதரர்கள் பார்க்காத குறை, அதே படத்தை மீண்டும் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த நீரும் நெருப்பும் படத்தைப் பார்த்து தீர்ந்தது.

உங்கள் படத்தை ரீ-மேக் செய்வதென்றால் எந்தெந்தப் படங்களை சிபாரிசு செய்வீர்கள்?

வேதம் புதிது, கடலோரக் கவிதைகள் இரண்டையும் இப்போதும் திரும்ப எடுக்கலாம்.

எம்.ஜி.ஆரின் வாரிசு யார் என்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறதே…?

சில பேருக்கு வாரிசு கிடையாது. எம்.ஜி.ஆருக்கும் வாரிசு கிடையாது. வாத்தியாருக்கு மாணவர்கள்தான் இருக்க முடியுமே தவிர, வாரிசு இருக்க முடியாது.

வம்புச்சண்டயில் உதய் கிரணுக்குதானே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது?

பாதி படத்திற்கு மேல் நான் வருவதாக சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதுக்கு காரணம் என்னுடைய மனப்பக்குவம்தான். உம்மா..உம்மம்மா பாடலெல்லாம் சும்மா காமெடிக்காக, என்றைக்கும் அந்த நினைப்பாவே இருக்கக் கூடாது.

இளம் ஹீரோவுடன் அனுபவப்பட்ட நடிகர் சேர்ந்து நடிப்பது இந்தியில் ரொம்ப சகஜம். அது மாதிரியான சூழல் இங்கேயும் உருவானால்தான் வித்தியாசமான கதைகள் கிடைக்கும். விரைவில் வம்புச்சண்ட இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகிறது. 

நடிகைகளின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது -நமீதா

Sunday, March 16th, 2008

003.jpg

 

கவர்ச்சியின் நடிப்பால் ரசிகர்களின் மனதை சிறை பிடித்திருப்பவர் நமீதா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ரகத்தை சேர்ந்தவை.
வெள்ளை மனசுக்கு சொந்தக்காரரான நமீதாவுடன் ஒரு கலகலப்பான சந்திப்பு.

கேள்வி: சினிமா மூலம் நீங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்திருக் கிறதா? மறைக்காமல் சொல்லுங்கள்

பதில்:நிச்சயமாக. நான் சினிமாவில் என்ன எதிர் பார்த்தேனோ அந்த வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது.நான் எப்போதுமே வெற்றி- தோல்வியைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக நடிப்பேன்.

கே: கவர்ச்சி-நடிப்பு இவற்றில் நீங்கள் அதிகமாக நம்புவது?

ப: தற்போதைய கால கட்டத்தில் இரண்டுமே அவசியம். வெறும் நடிப்பு திறமை மட்டும் இருந்து கவர்ச்சி இல்லை என்றால் சினிமாவில் பெரிய அளவுக்கு சாதிக்க முடியாது. அதற்காக கவர்ச்சியை மட்டும் நம்பி இருக்க முடியாது.

கே: நீங்கள் ஆபாசமாக நடிப்பதாக சில பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதே?

ப: பெரும்பாலும் நான் கதைக்கேற்றபடிதான் கவர்ச்சியாக நடிக்கிறேன். நானாக விரும்பி அப்படி நடிப்பதில்லை. டைரக்டர்கள் சொல்வது போல்தான் நடிக் கிறேன். இந்த விஷயத்தில் என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல.

கே: சமீபகாலமாக புதுமுக நடிகைகளால் போட்டி அதிகரித்து விட்டதே?

ப: எத்தனை புதுமுக நடிகைகள் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கென்று வருகின்ற வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவை பொறுத்தவரையில் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

கே: காதலரை நீங்கள் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறதே?

ப: யார் சொன்னது இதெல்லாம் சுத்த பொய். நான் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.என் காதலர் (பரத்கபூர்) பற்றியோ என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ என்ன கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன். சினிமா பற்றி மட்டும்தான் பதில் சொல்வேன்.நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை சிலர் விமர்சனம் செய்கிறார்கள் இது தவறு. நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

கே: வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?

ப: நான் 1998ம் ஆண்டு மிஸ்சூரத் அழகியாக தேர்ந் தெடுக்கப்பட்டேன். இதே போல 2001ல் மிஸ் இந்திய அழகிப்பட்ட போட்டியில் 3-வது இடம் பிடித்தேன். இவற்றை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.

ஓய்வுதான் அனைத்திற்கும் அடிப்படை! ஜெயம் ரவி

Sunday, March 16th, 2008

006.jpg

அழகிய அசத்தல் உடற்கட்டுக்குச் சொந்தக்காரர் இளம் புயல் ஜெயம் ரவி. அவரிடம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்று வினவினோம்.
ரகசியம் என்று நாம் கூறிவிட்ட பின்னரும், மறைத்து மழுப்பலான பதில்களைச் சொல்லாமல் மடை திறந்த வெள்ளமாய் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார் ரவி.

 

அவர் உடம்பைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் முறை, கலை மற்றும் காவல் துறையில் சேரும் தோழர்களுக்கு மட்டுமல்லாது, இளம் தோழிகளுக்கும் கூட மிக உபயோகமாக இருக்கும்.”கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்னு கூட என் உடம்பைச் சொல்லலாம்.அந்தளவுக்கு நான் சொல்றபடி என் உடம்பு கேட்கும். எல்லாருக்கும் அப்படி அமையாது. ஆனா எனக்கு அப்படி அமைஞ்சிருக்கு. திடீர்னு உடம்பைக் குறைக்கணும்னு சொன்னா, 15-30 நாளுக்குள்ள என்னால குறைச்சிட முடியும்.

அதே மாதிரி ஒரு படத்தோட கேரக்டருக்கு கட்டுமஸ்தான உடம்பு தேவைப்படுதுன்னா “டக்’னு ஏத்தி ஷூட்டிங் ஸ்பாட்ல போய் என்னால நிக்கவும் முடியும்.

ஓய்வுதான் அடிப்படை!

எந்தக் குறையும் இல்லாம உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சிக்கணும்னு நீங்க நினைச்சா, நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய முதல் விஷயம் உடம்புக்கு நல்ல ஓய்வு கொடுக்கறதுதான்!

ஏன்னா அதுதான் எல்லாத்துக்கும் அடிப்படை. சுவரிருந்தாதான் சித்திரம் வரைய முடியும்னு சொல்வாங்களே, அதுமாதிரி நல்லா ஓய்வு எடுத்தாதான் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைக்கெல்லாம் நல்ல எனர்ஜி ப்ளஸ் ஃப்ரஷ்னஸ் கிடைக்கும்.

உடற்பயிற்சி முக்கியம்!

உடற்பயிற்சி இல்லாம உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சிக்க முடியுமா என்ன? என்னால உடற்பயிற்சி பண்ணாம இருக்க முடியாது. அதனாலேயே இப்போ எங்க வீட்லயே எனக்காக ஒரு ஸ்பெஷல் ஜிம் போட்டாச்சி!

ஷூட்டிங் முடிஞ்சி லேட்டா வந்தாக்கூட ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டுத்தான் அடுத்த வேலையே ஆரம்பிப்பேன். ஏன்னா, நான் இப்போ கேப் இல்லாம ஷூட்டிங் போய்ட்டிருக்கேன். இந்த மாதிரி டைம்ல ஜிம் போய் வொர்க் அவுட் பண்ண டைம் இருக்கிறதில்ல.

அதனால வீட்லயே அன்னன்னைக்கு கரெக்டா வொர்க் அவுட் பண்ணினாதான் உடம்பை மெயின்டெய்ன் பண்ண முடியும்.

டான்ஸ் பண்ணுவீங்களா?

“பாடி பில்டிங்’ பயிற்சிகள் செய்யும்போது உடம்பு செம “ஸ்ட்ராங்’ ஆயிடும். அதனால அப்பப்போ வியர்வை வர்ற அளவுக்கு டான்ஸ் பண்ணினா உடம்புல சேர்ற தேவையில்லாத கொழுப்புகள் கரைய ஆரம்பிச்சிடும்.

அது மட்டுமில்ல, மனசுக்கு நல்ல அமைதி கிடைக்கும். டென்ஷன் குறையும். அதுவே நீங்க அதிகமான சவுண்ட்ல மியூஸிக் கேட்டுகிட்டே டான்ஸ் பண்ணும்போது மனசு லேசாயிடும். ஏதோ உன்னதமான ஒரு உலகத்துக்குப் போற மாதிரியான ஃபீல் கிடைக்கும்.

டான்ஸ் பண்றதால இன்னொரு நல்ல விஷயம், உடம்புக்கு நல்ல ஃப்ளக்ஸிபிலிட்டி கிடைக்கும். இதன் மூலமா ரொமான்டிக் மற்றும் காமெடி காட்சிகள்ல நல்ல பாடி லாங்வேஜை வெளிப்படுத்த முடியும்.

நீச்சலாவது…?

நீச்சல் பயிற்சியினாலயும் கூட டான்ஸ் பண்றதுக்கு இணையான பயன்களை நாம் பெறலாம். நீச்சல் பண்ணினா உடம்புக்கு நல்ல வடிவமும், மினுமினுப்பும் கூட கிடைக்கும்.

உணவுக் கட்டுப்பாடு வேணுங்க!

அடுத்த விஷயம் உணவுக் கட்டுப்பாடு. எல்லாரும் கஷ்டப்பட்டு உழைச்சி நல்ல சாப்பிடணும்னு நினைப்பாங்க. ஆனா ஒரு நடிகனைப் பொறுத்தவரைக்கும் அவன் எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறானோ அதே அளவுக்கு அதிகமா சாப்பிடக்கூடாது! கம்மியாதான் சாப்பிடணும் (சிரிக்கிறார்).

அப்புறம் எண்ணெய் அதிகமா கலந்திருக்கிற உணவுகள், ஐஸ்கிரீம் இந்த மாதிரி ஐட்டம்லாம் சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். அதுக்காக சாப்பிட்டுட்டே இருந்தோம்னா, தேவையில்லாம எடை போடுறதோட வயசாகற காலத்துல நோய்களையும் கொடுக்க ஆரம்பிச்சிடும்.

இதுதான் என் மெனு!

நான் இரவு நேரத்துல அரிசி சாதம் பெரும்பாலும் எடுத்துக்க மாட்டேன். சப்பாத்திதான் எப்பவும்! ஏன்னா, அரிசி சாதம் ஃபுல் அண்ட் ஃபுல் கார்போஹைட்ரேட்.

உடம்பை உடனே “பம்ப்’ பண்ணி எடை போட வச்சிடும். ஆனா காலையில கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கற இட்லி, தோசையைதான் அதிகமா சாப்பிடுவேன்.

காலைல சாப்பிடுறதைவிட மதியம் கொஞ்சம் கம்மியாதான் சாப்பிடுவேன். நைட் அதைவிட கம்மி. மதியத்துலயும், நைட்லயும் கார்போஹைட்ரேட் இருக்கிற ஐட்டங்களைக் குறைச்சு புரோட்டின் அதிகமா இருக்கிற சப்பாத்தி, சிக்கன் ஐட்டங்களைச் சேர்த்துக்குறுதுதான் என் டயட்.

இது மஸ்ஸில்ûஸ (தசைகள்) நல்லா டெவலப் பண்ணும். முட்டை வெள்ளைக் கருவிலயும் புரோட்டீன்ஸ் அதிகமுண்டு. நைட்ல எண்ணெய் சேர்க்காம சப்பாத்தி, கொஞ்சம் பழங்கள்.

வெப்பத்தைத் தணியுங்கள்!

பாடி ஹீட்டை கன்ட்ரோல் பண்ணாம உடம்பு ஏத்தறது வேஸ்ட்! நார்மலாவே எக்ஸர்ûஸஸ் பண்ணும்போது ஹீட் அதிகமா புரட்யூஸ் ஆகும். சிக்கன் மாதிரி ஐட்டங்களை எடுத்துக்கும்போது ஹீட் இன்னும் அதிகரிக்கும்.

úஸô, தண்ணி அதிகமா குடிக்கலாம். அப்புறம் உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸஸ், லெமன் ஜூஸ், இளநீர் அடிக்கடி குடிச்சோம்னா ஹீட் குறையறதோடு முகப்பருக்கள் மாதிரியான தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது. தோல் பளபளன்னு இருக்கும்.

கட்ஸ் வரமாட்டேங்குதா?

வாழைப்பழம் அதிகமா சாப்பிடுங்க! நல்ல எனர்ஜி கிடைக்கும். எண்ணெய்ல செய்யப்பட்ட உணவுகளை விட இயற்கை உணவுகள் எடுத்துக்கிறது ரொம்ப நல்லது.

அப்புறம் எக்ஸர்ûஸஸ் பண்ற நிறைய ஃப்ரெண்ட்ஸ் புலம்பறது என்னன்னா… “மச்சான் எவ்ளோ வொர்க் -அவுட் பண்ணியும் உடம்புல கட்ஸ் வரமாட்டேங்குதுடா’ன்றதுதான்!

கட்ஸ் வரணும்னா சுகர் லெவல் கம்மியா இருக்கிற சாப்பாட்டை எடுத்துக்கோங்க தலைவா!” என்று அசத்தல் அறிவுரையுடன் அட்டகாசமாய் சிரிக்கிறார் ரவி.

அரவாணியா நடிக்கிறேன் – மனோரமா

Friday, March 14th, 2008

ecddc508b16a49b159d10cd43e69e.jpg

யாரும் தொட முடியாத கின்னஸ் சாதனையை செய்தவர் மனோரமா. அவர் ஆயிரம் படங்களில் நடித்து இந்தப் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரும் நடித்துக் கொண்டே அவரது சாதனையை விசாலப்படுத்திக் கொண்டே போகிறார்.

அண்மையில் அவரை `ஜான்’ படப்பிடிப்பில் சந்தித்தபோது… மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இதில் அவர் அரவாணியாக நடிக்கிறார். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். இனி ஆச்சியுடன் பேசலாம்…

ஆயிரம் படத்தில் நடித்ததை விட மகிழ்ச்சியாக உணர்வது போல் தெரிகிறதே…?

நான் நிஜமா சந்தோஷமா இருக்கேன். நான் ஆயிரம் படத்துக்கு மேல நடிச்சிருந்தபோதும் அரவாணி கேரக்டர்ல இதுவரைக்கும் நடிச்சது இல்லை. ஆயிரம் வேஷம் போட்டாலும் இதுமாதிரி ஒண்ணு வரலை. எத்தனையோ கதாபாத்திரங்கள் பண்ணிட்டேன். இதுமாதிரி ஒண்ணு ஏன் நமக்கு வரலைன்னு நினைச்சதுண்டு.

அவ்வளவு ஆர்வமா இருந்தீர்களா?

ஆமாம். நான் பத்திரிகைகளில் பலமுறை இதை சொல்லி என் ஆசையை வெளிப்படுத்தியிருக்கேன். எதுக்கு ஆசைப்படறீங்க… என்ன மாதிரி பாத்திரத்தில் நடிக்க ஆசைன்னு கேட்டால் நான் இதைச் சொல்வேன். அப்படி பல காலம் மனசுக்குள் இருந்த ஆசை இப்போ நிறைவேறியிருக்கு. இந்த ‘ஜான்’ படத்தை இந்திரன் டைரக்ட் பண்றார். எஸ்.என்.எஸ். மீடியாங்கிற கம்பெனி தயாரிக்கிறாங்க. கதை சொன்னப்போ எனக்குப் பிடிச்சுப் போச்சு.

கதையில் உங்களுக்கு எந்த அளவில் முக்கியத்துவம் உள்ளது..? நகைச்சுவைக்காகவா… அல்லது…?

இதுவரை நிஜவாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி அரவாணிகளை ஒரு கேலிப் பொருளா வேடிக்கைப் பொருளாத்தான் பார்க்கிறாங்க. அவங்களைக் கிண்டல் பண்ணி எத்தனை படங்கள் வந்திருக்கு. ஆனா இந்தப் படத்தில் அவங்களை ஒரு தாயைப் போல தாய்மை ஸ்தானம் தந்து டைரக்டர் காட்டியிருக்கார். அதுதான் எனக்குப் பிடிச்சி நடிக்கச் சம்மதிச்சேன்.

தனிப்பட்ட முறையில் அரவாணிகள் மேல் உங்களுக்கு அனுதாபம் உண்டா?

நிச்சயமா அவங்க மேல எனக்கு அனுதாபம் உண்டு. அவங்க இந்த சமுதாயத்துல கேலிப் பொருளா பார்க்கப்படறது மட்டுமல்ல இந்தப் பிறவிக்காக பல விஷயங்களில் கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க. அதை அவங்க யார்கிட்டே சொல்றது. எங்கே போனாலும் பிரச்சினை. பாத்ரூம் போவதில் கூட பிரச்சினை எந்தப் பக்கம் போவதுன்னு. இப்படி பல மனக் கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க.

அவர்களின் பிரச்சினை படத்தில் சொல்லப்படுகிறதா?

இதுவரைக்கும் அரவாணி இனத்தை சினிமா பார்த்தது… சொன்னது காட்டியிருக்கிறது வேற. இந்தப் படத்துல காட்டியிருக்கிறது வேற. அவங்களுக்குள்ள பிரச்சினைகள் அதிகம். அவங்களுக்கு கோரிக்கைகள் நிறைய இருக்கு. அதுக்கு அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும். ‘ஜான்’ படம் வரட்டும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்பறேன்.

இதற்காக எந்த வகையில் முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டீர்கள்…?

இது தெரியாத விஷயமில்லை. நாம அன்றாடம் தினம் தினம் சந்திக்கிற கேரக்டர்தான். நான் அவங்களை உன்னிப்பா கவனிச்சு அவங்களோட நடை, உடை, பாவனைகளை தெரிஞ்சு வச்சிருக்கேன். இந்த `ஜான்’ பட பூஜையன்னைக்கு நிறைய அரவாணிகள் கலந்துக்கிட்டாங்க. அவங்க என்னைச் சுற்றி நின்னு என்னை விடவே இல்லை. அவ்வளவு பிரியமா – பாசமா நடந்துக்கிட்டது மறக்க முடியாது. ஒவ்வொருத்தரும் என் மேல அவ்வளவு பாசம், மரியாதை வச்சிருக்காங்க.

இப்படி ஆயிரம் படங்களில் நடிப்போம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?

நிச்சயமா நினைச்சதில்லை. நான் கதாநாயகியா நடிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் ஒரு நகைச்சுவை நடிகையா என் பாதை மாறிடுச்சு. காமெட் ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டோமேன்னு வருத்தம் இருந்திச்சு. பிறகு ஒரு தெளிவு வந்திச்சு. கதாநாயகியா நடிச்சிருந்தா இத்தனை வருஷம் சினிமாவுல நிலைச்சிருக்க முடியுமா… இதுபோல விதம்விதமா வேஷங்கள் போட்டிருக்க முடியுமா… இப்போ சந்தோஷப்படறேன். நகைச்சுவை நடிகைங்கிறதில் பெருமைப்படறேன்.

ஆயிரம் படங்களில் நடிச்சது பற்றி கேட்டப்போ, இந்த சினிமாவுல ரெண்டாயிரம் மூவாயிரம் படங்களில் முகம் காட்டி சிறுசிறு வேடங்களில் நடிச்சவங்க கூட இருக்காங்கன்னு சொல்லியிருக்கேன். எண்ணிக்கையில பார்த்தால் அவங்க என்னை முந்திட்டாங்கன்னு சொல்வேன்.

உங்களுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இடத்தைப் பிடிக்க யாரும் வரவில்லையா…?

நகைச்சுவை நடிகைங்கிறதை பெருமையா நினைக்கணும். எல்லாருக்கும் கதாநாயகி ஆசைதான் இருக்கு. எனக்குப் பிறகு கோவை சரளா நிறைய படங்களில் நடிச்சாங்க. நடிக்கிறாங்க. அவங்களுக்குப் பிறகு… யாரும் பெரிய அளவுல நீடிச்சு நிலைக்கலை. யாராவது வருவாங்க… பார்ப்போம்.

காலம் பூராவும் சினிமாவில் ஈடுபடுவேன் – ஆர்.கே. செல்வமணி

Friday, March 14th, 2008

479d8bf5d242ed8c78a7928f97bd3.jpg5ad0793fabe4d7eca15a423bfb1bda.jpg

பல கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள் என்பதெல்லாம் தற்போதைய கால கட்டத்தில் சகஜமாகி விட்டன. இந்த மெகா பட்ஜெட் கலாச்சாரத்தின் முன்னோடி என்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணியைக் கூறலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஓசைப்படாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அதுதான் புலன் விசாரணை-2. விரைவில் இப்படத்தை வெளியிடும் மும்முரத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.

இனி ஆர்.கே. செல்வமணியுடன்….

ஏன் இந்த நீண்ட இடைவெளி?

என் வா‌ழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லா சம்பவங்களும், அனுபவங்களும் பகிரங்கமாகி விட்டன. என் வாழ்க்கைப் போராட்டம் எல்லாரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சூழலில் என்னால் படம் இயக்க முடியும் என்று நான் நம்பவே இல்லை. இனி நாம் படமே இயக்கக் கூடாது என்றிருந்தேன்.

அப்படிப்பட்ட சூழலில்தான் புலன் விசாரணை-2 படம் அமைந்தது. என் முன்னேற்றத்தில் எப்போதும் பின்னணியில் இருக்கும் தயாரிப்பாளர் ராவுத்தர்தான் இதன் பின்னணியிலும் இருக்கிறார்.

சினிமா மீது வெறுப்பு வர குற்றப்பத்திரிக்கை அனுபவம்தான் காரணமா?

நிச்சயமாக. குற்றப்பத்திரிக்கை அனுபவம் மிகவும் கசப்பானது. கருத்து சுதந்திரம் மீது பல கேள்விகள் எழும்படியான கசப்பான அனுபவம். அந்தப் பட விஷயத்தில் சென்சார் செய்தது நிஜத்தில் அநீதி. அந்தக் காயம் என்னை வெகுவாகப் பாதித்தது. அதுபற்றி இனிப் பேசிப் பயனில்லை.

அந்த வெறுப்பு இப்போது போய் விட்டதா?

சினிமா என்றும் அழியாது. சினிமாவுக்கு மக்களுக்கு உள்ள அபிமானமும் என்றும் மாறாதது. குறையாதது. ஆனால் சினிமாவை நேசிப்பவர்கள் போராட்டங்களைச் சந்திக்கும் நிலை துரதிருஷ்டமானது. இன்று இது இயல்பாகி விட்டது. எனவே இதுபற்றி வருத்தப்பட்டு பயனில்லை. காயங்கள் பல இருக்கலாம். ஆனால் எல்லாக் காயங்களுக்கும் காலம்தான் மருந்து.

இந்த கால மாற்றம் எனக்கும் பல பாடங்களையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் எனக்குள்ளும் மனமாற்றம். எனவே தான் புலன்விசாரணை 2-க்குள் இறங்க முடிந்தது. நான் என்றும் என் வேலையில் சின்சியராக இருந்திருக்கிறேன். அது இப்படத்திலும் தெரியும்.

பிரம்மாண்டப் படங்களை முதலில் ஆரம்பித்தது நீங்கள்தான். இப்போது பலரும் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுபற்றி?

பெரிய படங்கள் என்றால் பெரிய ஹீரோக்கள் நடித்ததுதான் என்றிருந்தது ஒரு காலம். ஒரு சாதாரண கதை, காதல் கதையில் புதுமுகங்களை நடிக்க வைத்துக் கூட அதை மெகா பட்ஜெட்டில் உருவாக்க முடியும் என்பதை நான்தான் ஆரம்பித்து வைத்தேன். அதுதான் செம்பருத்தி.

அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட பெரிய பட்ஜெட்டில் யாரும் எடுக்கவில்லை. இந்த நிஜம் சில நேரம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இப்போது தன் உதவி இயக்குநர்களுக்கு தன் பட நிறுவனத்தி‌ல் படம் இயக்க வாய்ப்பு தந்து வருகிறார்கள் சில இயக்குநர்கள்.

இந்த நல்ல முயற்சியை ஆரம்பித்து வைத்தது நான்தான் என்று நம்புகிறேன். ஆனால் இன்றுள்ள சிலர் இதுபற்றி அறியாமல் பேசுகின்றனர். சினிமா பற்றி அதன் வரலாறு பற்றி தெரியாமல் சிலர் ஏதேதோ பேசி வருவதைக் கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கும். பிறகு எப்போதாவது உண்மை தெரியும் என்று மெளனமாக இருந்து விடுவேன்.

உங்களது அடுத்த முயற்சிகள் எப்படி உள்ளன?

சினிமா நான் நேசிக்கும் தொழில். காலம் பூராவும் இதில் ஈடுபடவே எனக்கு ஆசையும் கனவும். ஆனால் சூழ்நிலை என் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது. அதனால் விலகியிருக்க வேண்டியதாகி விட்டது. நான் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறேன். அப்போது புலன் விசாரணை என்ன மாதிரியான பாதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் புலன் விசாரணை 2 படமும் ஏற்படுத்தும்.

இதில் பிரசாந்தை வித்தியாசமாகக் காட்டியுள்ளேன். பிரசாந்தை வில்லனாகக் கூட காட்டி என்னால் வெற்றி பெற வைக்க முடியும். வில்லனிலும் ஸ்டைலாக அவரைக் காட்ட முடியும் என்பதை இப்படம் மூலம் நிரூபிப்பேன்.

குடும்பம் – வாழ்க்கை எப்படி உள்ளது?

இந்த சினிமா தந்த மாபெரும் பரிசு என் மனைவி ரோஜாதான். எங்களுக்குள் அன்பைத் தவிர வேறில்லை. எங்களுக்குள் நடக்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருப்பது மட்டுமல்ல, மருந்தாக இருப்பதும் இந்த அன்பு மட்டும்தான். மகள் அன்ஷுமாலிகா நாலு வயது ஆகிறது. மகன் கிருஷ்ண கெளசிக் ஒன்றரை வயது. இந்தக் குழந்தைகள் பரவசத்தின் – உற்சாகத்தின் பிறவிகள். அவர்கள் என் மாபெரும் சந்தோஷம். அப்படியே வாழ்க்கையும் நகர்கிறது.

The director who flattered Sneha!

Tuesday, March 11th, 2008

2_208.jpg

The movie launch of the Prasanna and Sneha starrer ‘Achchamundu Achchamundu’ took place yesterday in Chennai. Surprisingly the function took place in the evening, contrary to the usual routine which happens during the daytime. Since the director as well as the producer are currently in the US, the change in timing of the launch might be to adjust the time gap.

Arun Vaidyanathan who takes the director’s chair for this film has been in the US for more that eight years now. But don’t take for granted that Arun is an American, because he is one person who is interested to know about even the smallest of gossip and other stories happening back at home in Chennai.

Arun hails from Seerkhazhi. He was in this village for around 28 years before he left for the foreign soil, and is very much a Tamilian at heart. While in Chennai he used to quench his thirst for films on his own accord by researching.

In this flick ‘Achchamundu Achchamundu’ Arun is dealing with a global problem. The film stars Prasanna and Sneha in the lead roles, and is believed to be shot entirely in the US backdrop.

This is how the director flattered the heroine of this film. When Arun handed over the script to Sneha and went back home he seems to have received a call from her in just an hour and a half where the actress confirmed her role for the film. The actress is also believed to have congratulated the director for attempting this kind of a script.

Hats off to this director who is popularizing the Tamilian in the foreign soil


Gautham, Kamal & Atul – towards Gen IT

Tuesday, March 11th, 2008

 3_037.jpg

Well, the bug seems to be catching on. Film makers are definitely discovering a growing fascination within themselves for the life of the IT/call center generation- the odd hours, fat pay packets, their problems at work, with health and family – in general, the troubles of young men and women struggling to be in one place and live life at the pace of a city
   
millions of miles away. May be the information age life has a few more positives than are generally talked about, but the grey areas are undeniable and prominent with their presence.

Three different film industries have films under production that deal with aspects of youth in the fast lane of information technology. The first is from Bollywood, based on a cult novel by Chetan Bhagath , One Night @ Call Center. Many of you might have read this hugely successful book and the prospect of a movie does seem exciting. 
  Titled Hello and directed by actor turned producer Atul Agnihotri, the movie will have Sharman Joshi and Isha Koppikar playing the lead characters. Salman Khan makes a special appearance.

The second, (this you have certainly heard of) is Gautham Menon’s Chennaiyil Oru Mazhaikkalam starring Trisha with a host of newcomers. Currently paused for the completion of Vaaranum Aayiram, this movie will provide an insight into the life of the IT culture.
.
Finally, to Kerala, where veteran director Kamal has just launched a project that will again be based on the lives of people in the software/IT fields. The movie will star the prominent young guns of Malayalam cinema including Jayasuriya. 2_198.jpg

நகைச்சுவைதான் என்னை பிரபலமாக்கியது – வடிவேலு

Friday, March 7th, 2008

905e1d67dca374fccf2eb868d4938e.jpg6ca2463b8d3ba94acdd25250bde264.jpg

 

நகைச்சுவை நடிகர்களில் அசுரத்தனமாக முன்னேறி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே வசீகரித்து வைத்திருப்பவர் வடிவேலு. காமெடியனாக கலக்கி வந்தவர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாகவும் வெற்றி பெற்று விட்டார். இப்போது இவர் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தின் நாயகன். அவருடன் ஒரு சந்திப்பு….

‘இம்சை அரசன்’, ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’ படங்களுக்குப் பிறகு இனி கதாநாயகனாகத்தான் நடிப்பீர்களா?

நான் என்றுமே காமெடியன்தான். எனக்கு காமெடியனாக நடித்துதான் இந்த பெயரும் புகழும் கிடைத்தது. அதை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். நான் கதாநாயகனாக நடித்தது, நடிப்பது எல்லாமே நானாக தேடிப் போனது கிடையாது. என்னை இழுத்துக் கொண்டு போய் தள்ளிவிட்டு விட்டார்கள் என்று தான் சொல்வேன்.

‘இம்சை அரசன்’ படத்தில் நடித்த போதும் பயந்து கொண்டுதான் நடித்தேன். அது எப்படி ஓடும். ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் நடித்து முடித்த பிறகும் இருந்தது. படம் வெற்றி பெற்ற பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

முதல் படம் வெற்றி பெற்றுவிட்ட பின்பு `இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் தைரியமாக ஒப்புக் கொண்டீர்களா?

முதல் படம் வெற்றி பெற்று விட்டாலும் இன்னும் எனக்கு பயம் போகவில்லை. `இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் நடித்த போதும் அந்த பீதி குறையவில்லை. ‘இம்சை அரசனை ஏற்றுக் கொண்டார்கள் இந்த அழகப்பனை ஏற்றுக் கொள்வார்களா என்று சில நேரம் யோசிப்பேன்.

எது எப்படியோ தினம் தினம் பயம் இருக்கும். படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் போதெல்லாம் இந்த பயம் இன்னும் அதிகரிக்கும். ஸ்ரேயா நடிக்க வந்த போது படத்தின் பிரம்மாண்டம் இன்னும் கூடியது. அப்போது கூட எனக்கு பயமாகவே இருந்தது. படம் வரவேற்பு பெறும் என்கிற நம்பிக்கை இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது.

`இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ அனுபவம் எப்படி?

இந்தப் படத்தின் இயக்குனரை நான் பங்காளி என்று தான் அழைப்பேன். எனக்காக எழுதப்பட்ட கதை. என்னைப் புரிந்து அமைக்கப்பட்ட காட்சிகள். அதனால் ரசித்து ரசித்து செய்தார். இந்தப் படத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டேன்.

முதலில் 70 நாள் கால்ஷீட் கொடுத்தேன். படம் பெரிதாக வர வேண்டுமென்று 6 மாதம் கால்ஷீட் கொடுத்தேன். இந்திரன், எமன், நாடக நடிகர் அழகப்பன் என்று மூன்று வேடங்களில் நடித்து இருக்கிறேன். இதற்காக பல படங்களை இழந்து நடித்திருக்கிறேன். இதற்கான உடைகளை அணிவதே பெரிய கஷ்டம்.

அழகப்பனுக்குப் பிறகு வழக்கம் போல மற்ற நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பேன்.